SBS தேசிய மொழிப் போட்டியில் இரு தமிழ் மாணவர்கள் வெற்றி
SBS வானொலி ஆஸ்திரேலியா முழுவதும் நடத்திய மொழிப் போட்டியில் சுமார் 700 பள்ளிக்கூடங்களிலிருந்து 4 வயது முதல் 18 வயதுவரை என்று மொத்தம் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றியாளர்கள் ஆறு பேரில் மெல்பன் நகரில் வாழும் வைகா கார்த்திக் மற்றும் கதிர் ஜானகி சக்திவேல் என்று இரு தமிழ் குழந்தைகள் வெற்றிபெற்றனர். இவர்களுக்கு நேற்று(8) சிட்னி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed